கட்டாயப்பாடசாலை

கட்டாயப்பாடசாலை பிள்ளைகளுக்குப் போதிக்கும் அடிப்படைக்கல்வியுடன் தொடர்ந்தும் கற்பதற்கு உதவியாக இருக்கும். பகிரங்கப் பாடசாலைகள் இலவசமானவை.

பிள்ளையைப் பதிதல்

பகிரங்கப் பாடசாலைகளின் செயற்பாடுகளுக்கு கிராமசபைகளே பொறுப்பாகும். பிள்ளையைப் பாடசாலைக்குப் பதிவதற்கு கிராமசபையிலோ அன்றி நேரடியாகப் பாடசாலை அதிபரிடமோ தொடர்பு கொள்ளலாம்.

பாடசாலை நிலைகள்

கட்டாயப்பாடசாலை மூன்று ஒன்றன்பின் ஒன்றான நிலைகளைக் கொண்டது:

  • சிறுவர் பாடசாலை (Kindergarten) 2 வருடங்கள் எடுக்கும்.
  • ஆரம்பப்பாடசாலை (Primarschule) 6 வருடங்கள் எடுக்கும். ஊக்கமும் உதவியும் தேவையான பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் விசேட கவனம் கொடுக்கப்படும்.
  • மேற்பிரிவு (Sekundarstufe I) 3 வருடங்கள் எடுக்கும். இதில் 3 வகையான வகுப்புப் பிரிவுகள் (Oberschule, Realschule, Sekundarschule) உண்டு. ஒவ்வொரு பிரிவும் வித்தியாசமான திறமையின் அடிப்படையில் பிரிக்கப்படும்.
  • தாய்மொழி டொச் அல்லாத பிள்ளைகளுக்கு எல்லாப் பிரிவிலும் விசேட கவனம் கொடுக்கப்படும்.


பகிரங்க / தனியார் பாடசாலை

பகிரங்கப் பாடசாலைகள் இலவசமானவை. இங்கு ஆண் பிள்ளைகள் பெண்பிள்ளைகள் சேர்ந்தே ஒன்றாகக் கற்பார்கள். பாடங்கள் மதச்சார்பற்றவை. அதிகமான (95%) சிறுவர்கள் இளையவர்கள் தமது கட்டாயப்பாடசாலையை பகிரங்கப் பாடசாலையிலேயே படிப்பார்கள். தனிப்பட்ட பாடசாலைகளும் உள்ளன. பிள்ளைகளைத் தனிப்பட்ட பாடசாலைக்கு அனுப்ப விரும்பும் பெற்றோர் செலவுகளைத் தாமே பொறுப்பெடுக்க வேண்டும்.

தாய்மொழி மற்றும் கலாச்சாரத்தில் பாடங்கள் (HSK)

கட்டாய வகுப்புகளுக்கு கூடுதலாக, குழந்தைகள் தங்கள் தாய்மொழி மற்றும் கலாச்சாரத்தில் பாடங்களில் (Heimatliche Sprache und Kultur, HSK) கலந்து கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மொழியை நன்றாகப் புரிந்துகொள்ளவும், பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்கிறார்கள். உதாரணமாக, அவர்கள் வரலாறு, புவியியல், திருவிழாக்கள் மற்றும் சம்பிரதாயங்களைக் கையாளுகிறார்கள். இந்த வகுப்புகளில் கலந்துகொள்வது தன்னார்வமானது மற்றும் பொதுவாக கட்டணத்திற்கு உட்பட்டது, ஆனால் பரிந்துரைக்கப்படுகிறது.

பெற்றோரின் உரிமைகளும் பொறுப்பும்

பிள்ளைகளின் தினசரி பாடசாலை நாட்கள் மற்றும் அவர்களின் திறமைகள் பற்றியும் பெற்றோருக்கு அறியத்தருவது பாடசாலையின் பொறுப்பாகும். அதற்காகவே பெற்றோருடன் கலந்துரையாடல் (Elterngespräche ஆசிரியர் பெற்றோருக்கிடையில்லான கலந்துரையாடல்)(Elternabend பெற்றோர் மாலை பாடசாலை தகவல்களை பெற்றோருக்கு அறியத்தருதல்) மற்றும் தகவல் நிகழ்ச்சிகளில் பெற்றோர்களின் பங்கேற்பு மிகவும் அவசியமாகும். பிள்ளைகளை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்புவது பெற்றோர்களுடைய கடமையாகும். பிள்ளைகள் பாடங்களுக்கு சமூகமளிக்க முடியாவிடின் (நோய்வாய் பட்டீருந்தால்) அது பற்றி பெற்றோரே பாடசாலைக்கு அறியதர வேண்டும். பெற்றோர்கள் பள்ளியின் நலன்களில் அக்கறை காட்டினால், அதுவே அவர்கள் தங்கள் குழந்தையின் படிப்பிற்கு தரும் ஆதரவாகும்.

வினாக்களும் உதவிகளும்

பாடசாலை சார்ந்து ஏதேனும் வினாக்கள் இருப்பின் பெற்றோர் எப்போதும் முதலில் வகுப்பாசிரியரை நாட வேண்டும். பிள்ளைக்கு ஏதாவது தேவைப்படுவதாக உணர்ந்தாலோ அன்றி ஏதாவது வினாக்கள் இருப்பினும் ஆசிரியரும் முதலில் பெற்றோரை நாடவேண்டும். பொதுவாகவே பெற்றோர் ஆசிரியருடன் தொடர்பைப் பேணி ஒருங்கிணைந்து செயற்படு தல் மிகவும் முக்கியம்.