கடன்

சரியான நேரத்திற்குக் கட்டணங்களைச் செலுத்தாவிடின் உண்மையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும். நிதிப் பிரச்சனைகள் எற்படுமிடத்து கடன் ஆலோசனை நிலையங்களின் உதவியைப் பெறலாம்.

எச்சரிக்கைக் கடிதமும்

சரியான நேரத்திற்குக் கட்டணங்களைச் செலுத்தாவிடின் சாதாரணமாக முதலாவது இரண்டாவது எச்சரிக்கைக் கடிதங்கள் வரும் (Mahnung). அதன் பின்பு எந்த நேரத்திலும் கட்டணம் அனுப்பியவர் வசூலிப்பு நடைமுறையை (Betreibung) தொடரலாம். இதன்போது கட்டணம் கட்ட வேண்டியவருக்கு வசூலிப்பு நடைமுறை அலுவலகத்திலிருந்து (Betreibungsamt) கட்டணத்தைக் கட்டச் சொல்லி கடிதம் வரும். அதன் போது மேலதிக சேவைக் கட்டணமும் சேர்ந்து வரும். இந்நடைமுறை சட்டப்படி தவறென கருதுமிடத்து அவர் அதற்கு எதிரான ஒரு சட்டநடவடிக்கையை (Rechtsvorschlag) குறிப்பிட்ட வசூலிப்பு நடைமுறை அலுவலகத்தில் தொடரலாம். கவனம்: வசூலிப்பு நடவடிக்கையானது சம்பளப்பிடிப்பு அல்லது பெறுமதியான பொருட்களை எடுத்துச்செல்லல் போன்ற நடவடிக்கையாக இருக்கலாம். அத்துடன் வசூலிப்புநடைமுறையானது, வசூலிப்பு பதிவேடுகளில் (Betreibungsregister) பதியப்படும்(பணம் செலுத்தப்பட்டிருந்தாலும்). இது மற்றவற்றுடன் வீடுதேடுதலின் போது பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

கடன்

கடன் அல்லது நிதி நெருக்கடி இருந்தால் கடன் ஆலோசனை நிலையத்தை (Schuldenbetratungsstelle) நாடலாம். அங்கே உதவி கிடைக்கும். அங்குள்ள நிபுணர்கள் உங்களுடன் சேர்ந்து உங்கள் நிலையைத் தீர்க்க வழி தேடுவார்கள். Caritas நிறுவனம் அநாமதேய தொலைபேசி ஆலோசனையை "SOS-Schulden"- Beratungs-Hotline, தருகிறது. தொலைபேசி 0800 708 708 (இலவசம்) தேவைப்பட்டால் தொடர்ந்து வேறு ஒரு நிலையத்தைப் பரிந்துரை செய்யலாம். இணைய மூலமும் தேவையான தகவல்களைப் பெறப் பல மொழிகளிலுமுள்ள Schuldenberatung Glarnerland இணையதளத்தின் கடன் ஆலோசனைநிலையத்தைப் பாருங்கள்.