பாலியல் வன்முறை

பாலியல் வன்முறை என்பது குடும்ப வன்முறையின் ஒரு வடிவம். பாலியல் வன்முறை சுவிட்சர்லாந்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் அல்லது ஒரு சிறுமியாக இருந்தால் அவர் ஒரு பெண் காவல்துறை அதிகாரியிடம் தாக்குதல் பற்றி புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவர் ஒரு ஆண் ஆக இருந்தால் அவர் ஒரு ஆண் காவல்துறை அதிகாரியிடம் தாக்குதல் பற்றிச் புகார் அளிக்கலாம். பெரும்பாலான பாலியல் வன்முறை வழக்குகளில், காவல்துறையினர் குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். நீங்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க விரும்பாவிட்டாலும், பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு விரைவில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

மருத்துவ உதவி

கிளாரஸின் மானிலத்து மருத்துவமனையில் ரகசிய சிகிச்சைகளை வழங்கப்படுகின்றது. பாலியல் வன்முறைக்குப் பிறகு ஆதாரங்களை பாதுகாப்பது ஆவசியமாகும். பாலியல் வன்முறைக்குப் பிறகு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். மருத்துவர் ரகசியத்தன்மைக்குக் கட்டுப்பட்டவர் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இல்லாமல் யாருக்கும் தெரிவிக்க மாட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு சேவைகளுடன் மருத்துவர் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

  • கிளாரஸ் மானிலத்து மருத்துவமனை: தொலைபேசி 055 646 33 33
  • அவசர ஊர்தி: தொலைபேசி 144

வன்முறைக்கும் மருத்துவ பரிசோதனைக்கும் இடையில்

  • குளிக்கவோ அல்லது கழுவவோ வேண்டாம் - உங்கள் கைகள் கூட.
  • முடிந்தால், கழிப்பறைக்குச் செல்ல வேண்டாம்.
  • துணிகளைத் துவைக்க வேண்டாம், பரிசோதனைக்காக அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

போலீசில் புகார் செய்யுங்கள்

பாலியல் வன்முறை தொடர்பான புகார்களில் காவல்துறையினருக்கு அனுபவம் உள்ளது. புக்ர்எடுப்பு ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஒருவரால் நடத்தப்படுகின்றன. புகாரை காவல் நிலையத்தில் தாக்கல் செய்யலாம். நீங்கள் ஒரு நம்பகமான நபரையோ அல்லது பாதிக்கப்பட்ட ஆதரவு நிபுணரையோ உங்களுடன் அழைத்துச் செல்லலாம்.

அலுவலக நேரத்திற்கு வெளியே, 117 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் நீங்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளலாம்.

  • கிளாரஸ் மாகானத்தின் காவல்துறையை: தொலைபேசி 055 645 66 66